Sri Thatheeswarar,sri Valeeswarar,Sri Sundararaja Temples- Sithukadu(Thirumanam)

ஸ்ரீ தாத்ரீஸ்வர் ,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில் – சித்துக்காடு (திருமணம் )

ஸ்ரீ தாத்ரீஸ்வர் கோயில்

Sri Thatheeswarar temple- Sithukadu

மூலவர் : தாத்ரீஸ்வரர்
தாயார் : பூங்குழலி
ஊர் : திருமணம் ,சித்துக்காடு
மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு

  • இங்கு வசித்த படுக்கை ஜடா முனி சித்தர் மற்றும் பிராணதீபிகா சித்தர் தாங்கள் தவம் செய்ய இங்குள்ள நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை நிறுவினர் . சமஸ்கரத்தில் தாத்ரி என்றால் நெல்லி என்று பொருள் .
  • சிறந்த மணம் பொருந்திய வனம் என்பதால் இதை திருமணம் என்று அழைக்கப்படுகிறது . சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தர்காடு என்றும் அது மருவி சித்துக்காடு என்று அழைக்கப்படுகிறது .
  • இங்குள்ள தூண்களில் ஜடாமுனி மற்றும் பிராணதீபிகா சித்தர்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . சுவாச கோளாறு மற்றும் இதய நோயாளிகள் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர் .
  • சுவாதி நட்சத்திரர் உடையவர்கள் வணங்கவேண்டிய தலம் இது . சுவாதி நட்சத்திரர்க்காரர்கள் தங்கள் திருமண தடைகளை போக்க இங்கு வந்து தீபம் ஏற்றி வணங்குகிறார்கள்
  • இங்கு திருவாதிரை அன்று நடராஜர் மற்றும் சிவகாமி அவர்களுக்கு திருமணம் விமர்சியாக நடக்கும் இத் திருமணத்தை தம்பதியர் தரிசித்தால் ஒற்றுமை ஓங்கும் .
  • ஈஸ்வரனுக்கு முன் உள்ள நந்தி சாந்தமாக காட்சி அளிப்பது சிறப்பு அதனால் அவருக்கு மூக்கணாம் கயறு கிடையாது .

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில்

நான் 2015 ஆண்டு மே மாதத்தில் இக்கோயிலுக்கு சென்றுவந்தேன் , ஒரு அன்பர் இக்கோயிலை பற்றி என்னிடம் சொல்லும்போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். என் மனைவியுடன் பிரதோஷம் அன்று இக்கோயிலுக்கு சென்றேன் அன்றிலிருந்து நான் ஒவ்வொரு முறையும் பிரதோஷம் அன்று சிவன் கோயில்களுக்கு சென்று வருகிறேன் மற்றும் இங்கிருந்து 1 km தொலைவில் உள்ள வாலீஸ்வரர் கோயிலையும் சென்று மறக்காமல் பாருங்கள்.

மூலவர் : ஸ்ரீ சுந்தரராஜர் பெருமாள்

தாயார் : சுந்தரவல்லி தாயார்

  • சிவன் கோயிலுக்கு பின்புறம் இக்கோயில் உள்ளது.
  • மூலவர் தன் பெயருக்கு ஏற்றார் போல் சுந்தரமாக காட்சி அளிக்கிறார்
  • ஆனந்த கூத்தாடும் கண்ணனுக்கு தனி சன்னதி உள்ளது
Sri  sundararaja perumal temple- Sithukkadu
  • கருடக்கொடி சித்தர் இங்குள்ள குளத்திலேயே ஜீவ சமாதி அடைந்துவிட்டார் அவருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கினால் கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது .
  • இங்குள்ள ஆண்டாள் அம்மையாரின் தூண்களில் நரசிம்மர் உருவங்கள் மிக அழகாக பொறிக்கப்பட்டுள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-thatheeswararsri-valeeswararsri.html

ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில்

  • பெருமாள் கோயில் இருந்து 1 km தூரம் கூவம் ஆற்றின் கரையோரம் சென்றால் மிக சிறியதாக இங்குள்ள சிவ அடியார்களால் புணராமிக்கப்பட்டு மிக சிறப்பாக பராமரிக்கப்படுகிறது . பிரதோஷ நாட்களில் மிக சிறப்பாக நடத்துகிறார்கள் .
Sri Valeeswarar Temple-Sithukkadu

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :

வண்டலூர் மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் பூந்தமல்லி இருந்து பட்டாபிராம் போகும் வழியில் திருமணம் என்று பெயர் பலகை இருக்கும் . பட்டாபிராம் இருந்தும் செல்லலாம் .

காலை 8 மணி இருந்து 9.00 மணி மாலை 5 முதல் 7 மணி வரை . விசேஷ நாட்களில் மாறுபடும் .

இங்குள்ள எல்லா கோவில்களுக்கும் செல்லும் போது முடிந்தவரை நம்மால் தீப எண்ணெய் மற்றும் கோயில்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்லுங்கள் .

Thanks to ganeshnlr.blogspot.com

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *