Tirumoolar temple- Sathanur

Tirumoolar avathara sthalam – Sathanur (Kasi viswanatahr Temple)

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் - சாத்தனுர் (திருமூலர் அவதார தலம் ) 63 நாயன்மார்களில் ஒருவரும் 18  சித்தர்களில் ஒருவரான திருமூலர்  அவதார தலம் . திருமூலர் அவதாரம் : திருக்கைலத்தில் இருந்து யாத்திரையாக ஒரு சிவனடியார் அகத்தியரை காண தென் இந்தியாவை நோக்கி வந்தார் . அவர் காவேரி கரையோரம் உள்ள இந்த கிராமத்தின் வழியாக சென்றபோது இவ்விடத்தில் மேய்ச்சலுக்காக வந்த பசுக்கள் ஒரு இடத்தில கூடியிருந்ததை கண்டு அவர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார் .எல்லா பசுக்களும் கண்ணீர் சிந்தியவாறு நின்று இருந்ததை கண்டு அவற்றின் நடுவில் சென்று பார்த்தார் .அப்போது அங்கு நெற்றியில் விபூதியையும் கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்திருந்த ஒருவர் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்துபோனார் . அவனும் தன்னை போல் ஒரு சிவா பக்தன் என்பதை கண்டு வருத்தமுற்றார் .இதனை நாட்களாக பசுக்களை வளர்த்து பராமரித்த தன் மேய்ப்பவன் இறந்ததை கண்டு அந்த பசுக்கள் அழுவதை கண்டு கவலையுற்றார் .அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது ,அங்கு இருந்த ஒரு  மறைவான இடத்திற்கு சென்று தரையில் படுத்துக்கொண்டார் .கண்களை மூடிக்கொண்டு நமசிவாயத்தை சொல்லிக்கொண்டு உயிரின் மைய புள்ளியை உற்றுக் கவனித்தார் ,இன்னும் ஊர்ந்து கவனிக்க அது அசைந்து இருபுறமும் நகர்ந்தது பின்பு தன் உடலில் இருந்து நழுவி சென்று பேய்ப்பவனின் உடலில் சென்று அடைந்தது. ஆமாம் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார் !மேய்ப்பவன் தன் உடலில் உயிர் வந்தவுடன் அவன் மெதுவாக எழுந்தான் .இதை கண்டா பசுக்கள் பயத்தில் அந்த இடத்தில் இருந்து விட்டு வேகமாக சென்று அவைகள் தன் இருப்பிடத்தை அடைந்தன .எல்லா பசுக்களும் வந்துவிட்டன ஆனால் அவைகளை மேய்க்க சென்ற தன் கணவன் வரவிலேயே என்று எண்ணி அவள் தவித்தாள் .அப்போது மூலன் அங்கே வந்தான் ,அவள் மகிழ்ச்சியுற்று அவனது கைகளை பற்றினாள் .உடனே மூலன் அவள் கைகளை உதறி விட்டு உன் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லி நடந்தவைகளை பற்றி கூறினார் .உடனே அவள் கதறி அழுதாள் இதை அறிந்து ஊர் மக்களும் அழுதார்கள் .  மூலன் தன் உடலை விட்டு வந்த இடத்திற்கு சென்றார் .ஆனால் அங்கு அவர் உடல் இல்லை ,இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார் இனிமேல் இந்த உடல்தான் நாம் இருக்கவேண்டுமா என்று வருத்தமுற்றார் .அப்போது இறைவன் இவருக்கு திருகாட்சிதந்தார் .அவர் இவரிடம் எல்லா உயிர்களும் ஒருவருடையதுதான் .மரம் ,செடி ,விலங்குகள் ,மனிதன் என்று எல்லா உயிர்களிலும் நீ இருக்கிறாய் உடல் மட்டுமே வேறு ஆகும் உயிர் ஒன்றுதான் என்று மூலன் ரகசியத்தை உயர்த்திவிட்டு சென்றார் . அந்த மூலன் வேற யாரும் இல்லை ,வருடத்திற்கு ஒரு திருமந்திரம் மூலம் 3000 வருடங்கள்  வாழ்ந்து 3000 திருமந்திரங்களை தந்த திருமூலர் தான் அவர் . செல்லும் வழி: . மாயவரம் - கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு அல்லது நரசிங்கப்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோவில் செல்ல வேண்டும் . பேருந்து வசதிகள் இல்லை . அருகில் உள்ள கோயில்கள் : திருவாவடுதுறை பாடல் பெற்ற தலம், நரசிங்கப்பேட்டை நரசிம்மர் ,நரசிங்கப்பேட்டை சுயம்பு நாதர் கோயில் Location:

18 Siddhargal Names And Jeeva samathi places

பதினெண்சித்தர்கள் பெயர்கள் மற்றும் சமாதியான இடங்கள் 1 . அகத்தியர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார்,இவர் 4 யுகங்கள் மற்றும் 48 நாட்கள் வாழ்ந்தார் ,திருவனந்தபுரத்தில் சமாதியானார் . 2 . ராமதேவர் சித்தர் மார்கழி மாதம் பூரம் நட்சத்திரத்தில்…
Sri Thuravu Melazhagar Temple- Salupai- Elephant statue

Sri Thuravu Melazhagar Temple- Salupai

துறவு மேல் அழகர் கோயில் -சலுப்பை Elephant Statue https://www.youtube.com/watch?v=WXi_3sKTWbM நமது நாடு அதிகமான கிராமங்களால் ஆனது ,நமது கலாச்சாரங்களும் பண்பாடுகளையும் கிராம மக்களால் ,மட்டுமே நம்மால் அதிகமாக அறியமுடிகிறது ,அவர்கள் தன குடும்பத்திற்காகவும் தன ஊரை காக்கவும் கடவுளுக்கு கோயில்களை…
Sri Kota Sattemma Temple- Nidadavolu

Sri Kota Sattemma Temple- Nidadavolu

ஸ்ரீ கோட்டைசாட்டேம்மா கோயில் - நிடாடாவோலு சுயம்பு அம்மனாகும் ,10 அடி உயரத்தில் அபய ஹஸ்த முத்திரையில் சிரித்த முகத்துடன் அருள் தருகிறார் . 13 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரபத்ர சாளுக்கியா மற்றும் அவரது மனைவி ராணி ருத்ரா இவ்…
Sri someswara janardhana swamy temple-Bhimavaram

Sri someswara janardhana swamy temple-Bhimavaram

ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் -பீமாவரம் இறைவன் :  சோமேஸ்வரர் தாயார் : பார்வதி தேவி ,அன்னப்பூரணி தீர்த்தம் : சந்திர புஷ்கரணி ஊர் : குனிப்புடி ,பீமாவரம் மாவட்டம் : மேற்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் பஞ்சராம க்ஷேத்திரங்களில்…
Ksheera Ramalingeswara Swamy Temple- Palakollu

Ksheera Ramalingeswara Swamy Temple- Palakollu

ஸ்ரீ க்ஷீரா ராமலிங்கேஸ்வரர் கோயில் -  பால கொல்ல இறைவன் : க்ஷீரா ராமலிங்கேஸ்வரர் தாயார் : பார்வதி தேவி தீர்த்தம் : க்ஷீரா தீர்த்தம் ஊர் :பால கொல்ல மாவட்டம் : மேற்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம்…
Pancharama Kshetras

Pancharama Kshetras

பஞ்சாராம ஷேத்திரங்கள் Source from Google Thanks தாரகாசுரன்  என்ற அரக்கன் தனக்கு ஒரு பையனால் மட்டுமே இறப்பு ஏற்படவேண்டும் என்ற வரத்தை பெற்றான் அதனால் அவன் தேவர்களை கொடுமைப்படுத்தினான் ,அவனின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தாரகாசுரனை அழிக்க சிவனிடம் வேண்டியபோது அவர்…
Sri Venkateswara Swamy Temple- Vadapalli

Sri Venkateswara Swamy Temple- Vadapalli

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் - வடபள்ளி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மிக பிரபலமான கோயிலாகும் .இக்கோயில் கௌதமி நதிக்கரையில் அமைந்துள்ளது . கோநசீமா திருப்பதி என்று எல்லோரும் அழைக்கிறார்கள்.இந்த பெருமாள் சந்தனத்தால் ஆன சிறிய பெருமாளாகும்.இவர் கௌதமி நதியில்…
Sri Lakshmi Narasimha Temple- Antarvedi

Sri Lakshmi Narasimha Temple- Antarvedi

 ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் -அந்தர்வேதி தஷ்ணகாசி என்று அழைக்கப்படும் தலம். இவ் திருத்தலம் வங்காள விரிகுடா மற்றும் வசிஷ்ட கோதாவரி மற்றும் கோதாவரி நதி இவைகள் இணையும் முக்கோண சங்கமத்தில் இவ் திவ்ய தேசம் உள்ளது . இக்கோயிலுக்கு செல்லும்…
Sri Jaganmohini Kesava Perumal Temple-Ryali

Sri Jaganmohini Kesava Perumal Temple- Ryali

ஸ்ரீ ஜகன்மோகினி கேசவ பெருமாள் கோயில் -ரியலி பெருமாள் ஜகன்மோகினியாக பெண் உருவத்தில் புடவை கட்டி காட்சி கொடுக்கும் மிக முக்கியமான திவ்ய தேசம் ஆகும் இந்த ரியலி .பெருமாள் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட ஒரே…