Sri Thyagaraja & Vadiyudaiyambigai Temple-Tiruvottriyur

ஸ்ரீ வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி கோயில் – திருவொற்றியூர்

Sri Thyagarajar & Vadivudaiyaman Temple-Tiruvottriyur

இறைவன் : படம்பக்கநாதர் ,ஒற்றீஸ்வரர் ,ஆதிபுரீஸ்வரர் ,தியாகராஜர்

தாயார் : வடிவுடையாம்பிகை ,வட்டப்பாறையம்மன்

விருச்சம் : மகிழம் ,அத்தி

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ,நந்தி தீர்த்தம்

ஊர் : திருவொற்றியூர்

மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு

  • தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 253வது தலம்.தொண்டைநாட்டு தேவார தலங்களில் 20 வது தலமாகும் .ஆதிபுரி என்பது இவூரின் பழம் பெறும் பெயராகும்.
  • பல்லவர்கள் முதன்முதலில் கோயில் கட்டினார்கள் அதன் பிறகு முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது . கஜபிருஷ்டம் மற்றும் கருவறைகள் பல்லவர்களின் கலைவண்ணத்தை காட்டுகிறது .
  • சுயம்பு லிங்கம் ,ஆவுடையார் கிடையாது. இங்கு எல்லாமே இரண்டு சுவாமி ,அம்பாள் ,தீர்த்தம் ,பூஜை ,விருச்சகம் இவை எல்லாமே இரண்டு ஆகையால் இரண்டு என்பது பிரதானமானது
  • இங்கு பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். துர்க்கை காலின் கீழ் மகிஷாசுரன் இல்லை
  • அம்மனின் 51 சக்தி பீடங்கலில் இது இஷி சக்தி பீடமாகும்
  • பிரமனின் விருப்பத்திற்கேற்ப ஈஸ்வரன் மண்ணுலகில் எழுந்தருளிய முதல் திருத்தலம்.
  • ஏழாம் நூற்றாண்டில் காளியின் வடிவமாக உள்ள வட்டப்பாறை அம்மனை தொண்டைமான் சக்கரவர்த்தி வழிபட்டதாக கூறுகிறார்கள் . .
  • ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை விளக்கும் திருமூர்த்திகளின் ஓர் வடிவம் பெற்ற தலம். பஞ்சபூத தலங்கள் ஒரே இடத்தில அமைந்த தலம் .
  • ஆதிசேஷன் மற்றும் சந்திரன் ஒருங்கே நின்று சிவனை வழிபட்ட தலம். அகத்தியர் இறைவனின் திருமணக்கோலத்தை கண்டு களித்த தலம் .
  • இலவன் பிரதோஷ நாளில் சிவனை வழிபட்ட தலம் .நந்தியம் பெருமானுக்காக சிவன் பத்மதாண்டவம் ஆடிய தலம்.
  • திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலம் .சுந்தரர் சங்கிலி நாச்சியாரை சிவபெருமான் முன்னிலையில் மணம் புரிந்த சிறப்புமிக்க தலம் .
  • அருணகிரிநாதர் ,வள்ளலார் ,பட்டிணத்தார் ,பாம்பன் அடிகளார் போன்ற இருபது அருளாளர்கள் போற்றி பாடிய தலம் .தெய்வங்கள் ,முனிவர்கள் ,தேர்வர்கள் மற்றும் ஆறு அரசர்கள் வழிபட்ட தலம்
  • 27 நட்சத்திர லிங்கங்களை கொண்ட தலம். திருவொற்றியூரை நினைத்தாலே வினைகள் நீங்கும் .

வடிவுடைநாயகி :

இவர் இங்கு இஷி சக்தி (ஞான சக்தியாக ) அருள்புரிகிறார் . 51 சக்தி பீடங்களில் இத்தளம் இஷி சக்தி பீடமாகும் .

மூவுலகை ஆளுகின்ற அன்னை ஆதி பராசக்தி நம்மவர்களுக்கு தாயக ஆள்கிறார் .இவர் இச்சா சக்தி ,ஞான சக்தி ,கிரியா சக்தி என முப்பெரும் தேவியாக அருள்பாலித்து வருகிறார் .
சென்னையில் இவர் மூன்று இடங்களில் இவ் சக்திகளாக காட்சிதருகிறார் இவர்களை பவுர்ணமியும் வெள்ளிக்கிழமையும் ஒன்றாக வரும் நாளில் ஒரே நாளில் தரிசனம் செய்தல் வாழ்க்கை செம்மயாகவும் ,ஒளிமயமாகவும் விளங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .

  1. திருவுடையம்மன் -இச்சை சக்தி – மேலூர் (மீஞ்சூர் )-அதிகாலை தரிசனம்
  2. வடிவுடையம்மன் -ஞான சக்தி -திருவொற்றியூர் -உச்சிவேளை தரிசனம்
  3. கொடியுடையம்மன் – கிரியா சக்தி – திருமுல்லைவாயல் -மாலை தரிசனம்

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-thyagarajar-vadivudainayagi-temple.html

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம்:

மத்திய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை

அருகில் பட்டினத்தார் அடிகளாரின் ஜீவ சமாதி உள்ளது இந்த இடத்தை பற்றி பின்னர் எழுதிகிறேன்.

Location

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *