Vinayagar Slokams

விநாயகர் மந்திரங்கள்

Vinayagar Slokams and Manthras

நாம் எந்த ஒரு செயலை தொடங்குவது என்றாலும் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட,துன்பங்கள் ஏதுமின்றி நடத்திக் கொடுப்பார் அந்த முழுமுதல் மூலக்கடவுள்.


விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்.


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ஞோப சாந்தயே.


விநாயகர் ஸ்லோகம்
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.


விநாயகர் காயத்ரி மந்த்ரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


விநாயகர் ஸ்லோகம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


மூஷிக வாகன மோதக ஹஸ்த ஸ்யாமள கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.
தினமும் இந்த மந்த்ரங்களைப் படித்து அருகம் புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் பரிபூரணமாகக் கிடைக்கும்.

Leave a Reply