Skantha Guru Kavasam lyrics


கந்த குரு கவசம் பாடல் வரிகள்

கந்த குரு கவசம் பாடல் வரிகள்
கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே.


ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்சரவணபவ குஹா சரணம் சரணம்குருகுஹா சரணம்; குருபரா சரணம்சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவேஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமேதத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்


அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனேஅறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதாசண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோகாத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதாபோற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதாபோற்றி போற்றி ஸ்கந்தா போற்றிபோற்றி போற்றி முருகா போற்றி


அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய்தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதைஅகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே


ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காணஅகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்


அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயேவேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய்வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவேதேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனேதிருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தாபரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய்


அடிமுடியறிய வொணா அண்ணா மலையோனேஅருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவாதிருப்பரங்கிரி குஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்எட்டுக்குடி குமரா ஏவல்பில்லி சூனியத்தைபகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவேஎங்கும் நிறைந்த கந்தா; எண்கண் முருகா நீஎன்னுள்ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யாஅறிவொளியாய்வந்த நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவாஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்செங்கோட்டு வேலவனே சிவானு பூதிதாரும்சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்குன்றக்குடி குமரா குருகுகனாய் வந்திடப்பா


குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பாபவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பாவிராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பாவயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரேவெண்ணெய் மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்


மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்வடபழனி யாண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்ஏழ்மையகற்றி கந்தா எமபயம் போக்கிடுவீர்அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்


பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்குபணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயேபடர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையேஉலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்


அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோயாவர்க்கும் இனியன் நீ; யாவர்க்கும் எளியன் நீயாவர்க்கும் வலியன் நீ; யாவர்க்கு மானோய் நீஉனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனேசிவசக்திக் குமரா சரணம் சரணமையாஅபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்


நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீமுக்திக்கு வித்தான முருகா கந்தாசதுர்மறை போற்றும் ஷண்முக நாதாஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா


ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோஆதிமூலமே அருவாய் உருவாய் நீஅடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வாதேவாதி தேவா சிவகுரோ வா வா வாவேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா


காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமேமித்தையாம் இவ்வுலகை மித்தையென் றறிந்திடச்செய்அபயம் அபயம் கந்தா; அபயமென்று அலறுகிறேன்அமைதியை வேண்டி அறுமுகா வா வாவென்றேன்உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்


உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பாஅஜபை வழியிலே அசையாம லிருத்திவிடுசித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடுசிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடுஅருள்ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடுஅறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடுஅனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்ஸ்கந்த குருநாதா; ஸ்கந்த குருநாதா


தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்துநல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்துபாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச் செய்அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோசித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருளசீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்


சிவனைப் போலென்னைச் செய்திடுவதுன் கடனேசிவசத் குருநாதா சிவசத் குருநாதாஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்குதிருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டுகிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்


தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரேபத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்


நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்புருவங்களுக் கிடையே புரு÷ஷாத்தமன் காக்கட்டும்கண்க ளிரண்டையும் கந்தவேல் காக்கட்டும்நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்கன்னங் களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்நாக்கை நம்முருகன் நயமுடன் காக்கட்டும்


பற்களைக் கந்தன் பலம் கொண்டு காக்கட்டும்கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்தோள்களிரண்டையும் தூயவேல் காக்கட்டும்கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்மார்பையும் வயிற்றையும் வள்ளி மணாளன் காக்கட்டும்மனத்தை முருகன் கைமாத்தடிதான் காக்கட்டும்ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத் திருக்கட்டும்உதரத்தையெல்லாம் உமை மைந்தன் காக்கட்டும்


நாபிகுஹ்யம் லிங்கம் நவையுடைக் குதத்தோடுஇடுப்பை முழங்காலை இணையான கால்களையும்புறங்கால்விரல்களையும் பொருந்துமுகர் அனைத்தையுமேஉரோமத் துவாரமெல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்ஸமென்பு மேதஸையும்அறுமுகா காத்திடுவீர்; அமரர் தலைவா காத்திடுவீர்என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாயிருந்தும்முருகா வெனைக்காக்க வேல்கொண்டு வந்திடுவீர்


பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவேஓம் ஸெளம் சரவணபவ; ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்க்லௌம் ஸெளம் நம: வென்று சேர்த்திடடா நாள்தோறும்ஓமிருந்து நம: வரை ஒன்றாகச் சேர்த்திடடாஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்திஒருமனத்தோடு நீ உருவையும் ஏத்திடடாமுருகனின் மூலமிது முழுமனத்தோ டேத்திட்டால்மும்மல மகன்றுவிடும் முக்தி உந்தன் கையிலுண்டாம்


முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்லவேண்டாம்முருகன் இருப்பிடமே முக்தித் தலமாகுமப்பாஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமேஇக்கணமே மூலமந்திரம் ஏத்திவிடு ஏத்திவிடுமூலமதை ஏத்துவோர்க்குக் கால பயமில்லையடாகாலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடாசொன்னபடிச் செய்தால் சுப்பரமண்ய குருநாதன்தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்


ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமேமூலத்தை நீ ஜபித்தே முத்தனு மாகிடடாஅக்ஷர லக்ஷம் இதை அன்புடன் ஜபித்துவிடில்எண்ணியதெலாம் கிட்டும் எமபயம் அகன்றோடும்மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய் நீகோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பாகோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமேஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமேவேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளேவேத சூக்ஷ்மத்தை விரைவாகப் பற்றிடலாம்சுப்பரஹ்மண்ய குரு ஜோதியாயுள் தோன்றிடுவான்அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமேஅந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்


மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீவந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறி வாகவே நீபகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பாபகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றாள்பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய் நீபிரமனுக் கருளியவா பிரணவப் பொருளோனேபிறவா வரமருளி பிரம்ம மய மாக்கிடுவாய்திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கிவிட்டாய்


பழமுதிர்ச் சோலையில் பரஞ்சோதி மயமானாய்சுவாமி மலையிலே சிவசுவாமிக் கருளிய நீகுன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டாய்ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையேஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியேபிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்


எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்கந்தா சரணம் கந்தா சரணம்சரண மடைந்திட்டேன் சடுதியில் வாருமேசரவண பவனே; சரவண பவனேஉன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பாஎன்னிலுன்னைக் காண எனக்கு வரமருள்வாய்சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்


இந்திரிய மடக்கி இருந்து மறிகிலேன் நான்மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவேசிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் <உபதேசம்காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்நினைப்பெல்லாம் நின்னையே நினைத்திடச் செய்திடுவாய்திருமுருகா வுன்னைத் திடமுற நினைத்திடவே


திருவருள் தந்திடுவாய் திருவருள் தான் பொங்கிடவேதிருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்நித்யானந்தமே நின்னுரு வாகையினால்அத்வை தானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய்ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்ஸ்கந்த குருநாதா ஸ்கந்தகுரு நாதாகேள்மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச்செய்


வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்தாரித்திரியங்களை உன் தடிகொண்டு விரட்டிடுவாய்துக்கங்களனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடாமெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்


கண்கண்ட தெய்வமே கலியுக வரதனேஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமைஇக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீஎன்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவேஅரைக்கணத்தில் நீயும் ஆடிவரு வாயப்பாவந்தென்னைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோஅன்புத் தெய்வமே ஆறுமுகமானவனேசுப்ரஹ் மண்யனே சோகம் அகற்றிடுவாய்


ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீஞான தண்டபாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்அகந்தையெலாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்அன்புமயமாக்கி ஆட்கொள்ளு வையப்பாஅன்பைஎன் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடுஅன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையேஉறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்


எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீஅங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்அன்பே சிவமும்; அன்பே சக்தியும்அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்அன்பே தேவரும்; அன்பே மனிதரும்அன்பே நீயும்; அன்பே நானும்அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்


அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பாஅன்பில் உறையும் அருட்குரு நாதரே தான்ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்த குருவானான் காண்மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவேஸ்கந்தாஸ்ரமந் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்


ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுருஇருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குருஎல்லையில்லாத உன் இறை வெளியைக் காட்டிடுவாய்முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவேநம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோஉன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே


நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்பிரம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதாஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்மெய்யடியராக்கி மெய் வீட்டில் இருத்தி விடும்கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோகொல்லிமலை மேலே குமரகுரு வானவனே


கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதாகருவூரார் போற்றும் காங்கேயா ஸ்கந்தகுரோமருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோசென்னி மலைக்குமாரா சித்தர்க் கருள்வோனேசிவவாக்கிய சித்தருளைச் சிவன்மலையில் போற்றுவரேபழனியில் போகருமே பாரோர்வாழப் பிரதிஷ்டித்தான்புலிப்பாணி சித்தர்களால் புடைசூழ்ந்த குமரகுரோகொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா


கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரேகற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமேஉலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம்ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்பக்தர்களும் போற்றும் பழனிமலை முருகா கேள்கொங்கு தேசத்திலே குன்றுதோறும் குடிகொண்டோய்சீலம் நிறைந்த சேலம் மாநகரத்தில்


கன்னிமார் ஓடையின் மேல் ஸ்கந்தகிரி அதனில்ஸ்கந்தாஸ்ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்அமர்ந்திருக்கும் ஜோதியே; ஆதிமூலமான குரோஅயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியேபேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பாபரமானந்தமதில் எனை மறக்கப் பாலிப்பாய்மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ


சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பாசிவஞானப் பழமான ஸ்கந்தகுரு

நாதாபழம் நீ என்றதினால் பழனிமலையிருந்தாயோதிருவாவினன்குடியில் திருமுருகனானாயோகுமரா முருகா குருகுகா வேலவனேஅகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தைகலியுக வரதனென்று கலசமுனி உனைப் புகழ்ந்தான்


ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோஒழுக்கமோடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்போகருக்கு அருள் செய்த புவன சுந்தரனேதண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பாஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனேதெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியேஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனேகடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம்உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்


கண்கண்ட தெய்வமே கலியுக வரதனேகந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியைதிருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாகபுவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்


நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்முருகா முருகா வென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பாமுருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பாஅப்பப்பா முருகனின் அருகே உலகமப்பாஅருளெல்லாம் முருகன்; அன்பெலாம் முருகன்ஸ்தாவர ஜங்கமமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்


முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுருஸ்கந்தாஸ்ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்சத்தியம் சொல்கிறேன் சந்தேகமில்லையப்பாவேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீசந்தேகமில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்சத்தியமான தெய்வம் ஸ்கந்த குருநாதன்சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா.


சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்லஸ்கந்தகுருவே சத்தியம்; சத்தியமே ஸ்கந்தகுருசத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீசத்தியமாய் ஞானமாய் சதானந்தமாகி விடுஅழிவற்ற பிரம்மமாய் ஆக்கிவிடுவான் முருகன்திருமுறைகள் திருமறைகள் செப்புவதும் இதுவேதான்ஸ்கந்தகுரு கவசமதைச் சொந்தமாக்கிக் கொண்டு நீபொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்


பிறவிப் பிணியகலும் பிரம்மானந்த முண்டுஇம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்மூவருமே முன்னிற்பர்; யாவருமே பூஜிப்பர்அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பாசிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பாகவலையகன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமேபிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமேகந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்


கவசம் ஏத்துவீரேல் கலியை ஜயித்திடலாம்கலியென்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமேசொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தொன்றி ஏத்துவோர்க்குஅஷ்ட ஐஸ்வர்யம் தரும்; அந்தமில்லா இன்பம் தரும்ஆல்போல் தழைத்திடுவன்; அறுகுபோல் வேறோடிடுவன்வாழையடி வாழையைப் போல் வம்சமதைப் பெற்றிடுவன்பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்சாந்தியும் சௌக்யமும் ஸர்வமங்களமும் பெருகிடுமேஸ்கந்தகுரு கவசமிதை கருத்திறுத்தி ஏற்றுவீரேல்கர்வம் காமக்ரோதம் கலிதோஷ மகற்றுவிக்கும்முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்அறம்பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய் கிட்டும்ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்கள்ளமிலா உளத்தோடு கந்தகுரு கவசந்தன்னைசிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப்


பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்றுகாத்திடுவான் கந்தகுரு; கவலையில்லை நிச்சயமாய்ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீகந்தகுரு கவசந்தனை ஓதுவதே தவமெனவேஉணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான


இகபர சுகமுண்டாம் என்னாளும் துன்பமில்லைதுன்பம் அகன்றுவிடும் தொந்தரவுகள் நீங்கிவிடும்இன்பம் பெருகிவிடும்; இஷ்டசித்தி கூடிவிடும்பிறவிப் பிணியகற்றி ப்ரம்மநிஷ்டையும் தந்துகாத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமேகவலையை விட்டு நீ கந்தகுரு கவசமிதைஇருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால்தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்


போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்ஞான ஸ்கந்தகுரு நானென்று முன்நிற்பன்உள்ளொளி யாயிருந்து உன்னில் அவனாகிடுவன்தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டிஎங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்ஸ்கந்தஜோதியான கந்தன் கந்தகிரியிலிருந்து


தண்டாயுதம் தாங்கித் தருகிறான் காட்சியுமேகந்தன் புகழ்பாடக் கந்தகிரி வாருமினேகந்தகிரி வந்துநிதம் கண்டுய்மின் ஜகத்தீரேகலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதைபாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம் கொடுக்கும்ஒருதரம் கவசமோதின் உள்ளழுக்குப் போகும்இருதரம் ஏத்துவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்


மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுருநான்குமுறை யோதி தினம் நல்லவரம் பெறுவீரேஐந்துமுறை தினமோதி பஞ்சாக்ஷரம் பெற்றுஆறு முறையோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்ஏழுமுறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்எட்டுமுறை ஏத்தின் அட்டமா சித்தி கிட்டும்ஒன்பது தரமோதின் மரண பயமொழியும்பத்துத்தர மேத்தி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே


கன்னிமார் ஓடையில் நீராடி நீறுபூசிக்கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால்முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவான்நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையும் கைகூடும்கன்னிமார் ஓடைநீரை கைகளிலே நீ எடுத்துக்கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றிஉச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டால் உன்சித்தமலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்


கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலேகண்டு வழிபட்டு கந்தகிரியேறிடுவீர்கந்தகிரியேறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைபாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.

2 Comments

Cancel reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *