Pooja

வரலக்ஷ்மி விரதம் பூஜை முறைகள்

kalasam Amman

பூஜைக்கு தேவையான பொருள்கள் :

மஞ்சள் பொடி,
குங்குமம்
சந்தனம்
புஷ்பமாலை
உதிரி புஷ்பம்
எலுமிச்சம் பழம்
தேங்காய்
பச்சை அரிசி
பாக்கு
வெற்றிலை
வஸ்திரம் (சிகப்பு பட்டு சிறந்தது)
பால்
தேன்
பஞ்சாமிர்தம்
தயிர்
கற்பூரம்
ஊதுவத்தி
சாம்பிராணி
மஞ்சள் சரடு
நெய்
நெல்
ஒரு ரூபாய் நாணயம்
மாவிலை
நுனி வாழை இலை
வாழை பழம்
தோரணம்
காதோலை கருகமணி
ஆபரணம்
அக்ஷதை
வாழைக்கன்று -2
தாமரை பூ
தாழம் பூ

நைவேத்ய பதார்த்தங்கள் :

உப்பு கொழுக்கட்டை
வெல்ல கொழுக்கட்டை
பச்சரிசி இட்லி
உளுந்து வடை
சக்கரை பொங்கல்
அப்பம்
பருப்பு பாயசம்

நோன்பிற்க்கு சுவற்றில் வெள்ளை அடித்து அம்மன் எழுத வேண்டும். இல்லா விடில் படம் மாட்டிக் கொள்ளலாம் .முதல் நாள் (வியாழன்) மாலை கண் திறந்து சிறு புள்ளி வைத்து வெண்பொங்கல் செய்து முடியாவிட்டில் சாதமாவது வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும் .சொம்பிற்க்கு சுண்ணாம்பு பூசி காவியால் முகம் எழுதவேண்டும்,சொம்பிற்குள் அரிசி 1/4 படி, எலுமிச்சம் பழம் -1,காதோலை கருகம்மணி -1, வெற்றிலை பாக்கு, மஞ்சள், 5 ரூபாய் காசு சொம்பில் போடவேண்டும். சொம்பிற்கு மாங்கொத்து வைத்து தேங்காய் குங்குமம் இட்டு பூவை சாத்தி சொம்பின் கழுத்துக்கு கருகமணி போட வேண்டும். தாம்பாளத்தில் அரிசி கொஞ்சம் போட்டு அதன் மேல் சொம்பை அலங்காரம் செய்து வைத்து ரேழி இருந்து (தாழ்வாரம் வாசல் பக்கம்) கோலம் போட்டு அதன் மேல் வைத்து சந்தனம் குங்குமம் இட்டு பூ போட்டு (அக்ஷதை) கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் செய்து (ஆரத்தி எடுத்து அதை பூஜை செய்யும் இடத்தில் கொண்டு வைக்க வேண்டும்) இருவர் பிடித்து குனிந்த படி பூஜை செய்யும் இடத்தில் கோலம் போட்டு (மனை பலகை) அதன் மேல் வைக்க வேண்டும் பிறகு பூஜை செய்யவும், குத்து விளக்கை ஏற்றவும், பஞ்சினால் மாலை மாதிரி மஞ்சளை தொட்டு கொண்டு வஸ்திரம் செய்யவும், அதை சொம்பின் மேல் போட வேண்டும். ரவிக்கை துண்டு சார்த்தவும்.மஞ்சள் சரடில் பூவை கட்டி வைத்துக்கொள்ள வேண்டும் . மஞ்சள் பிள்ளையார் பிடித்து கொள்ளவும், சொம்பின் பக்கத்தில் தாம்பாளத்தில் எலுமிச்சை பழம் 1, காதோலை கருகமணி 1 வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு தேவையான வற்றை எடுத்து கொண்டு பூஜை செய்யவும். (Refer Varalakshmi nombu book).சரடை  வலது கையில் கட்டவேண்டும் .

விக்னேஸ்வர_பூஜை

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, 

ஓம் அச்சுதாய நம: ஃ ஓம் அனந்தாய நம: ஃ ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம். 
கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்| ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே|| 
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே|| – என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி ஃ ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி ரூ என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும். 


இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும். 
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி| ” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்) ” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்) ” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்) ” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்) புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும். 
ஓம் சுமுகாய நம: | ஓம் ஏகதந்தாய நம: | ஓம் கபிலாய நம: | ஓம் கஜகர்ணாய நம: | ஓம் லம்போதராய நம: | ஓம் விகடாய நம: | ஓம் விக்னராஜாய நம: | ஓம் விநாயகாய நம: | ஓம் தூமகேதவே நம: | ஓம் கணாத்யக்ஷாய நம: | ஓம் பாலசந்த்ராய நம: | ஓம் கஜானனாய நம: | ஓம் வக்ரதுண்டாய நம: | ஓம் சூர்ப்பகர்ணாய நம: | ஓம் ஹேரம்பாய நம: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: | ஓம் ஸித்திவிநாயகாய நம: | ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும். 
அம்ருதோபஸ்தரணமஸி | ஓம் ப்ராணாய ஸ்வாஹா | ஓம் அபாநாய ஸ்வாஹா | ஓம் வ்யாநாய ஸ்வாஹா | ஓம் உதாநாய ஸ்வாஹா | ஓம் ஸமாநாய ஸ்வாஹா | ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா | மஹாகணபதயே நம: அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்… பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும். 
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப| நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா|| – என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்… 


சுபே சோபனே முஹ_ர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ரூ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதிரூ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, விளம்பிநாம ஸம்வத்ஸரே, தெக்ஷ்ணாயனே வர்ஷருதௌ, சிம்மமாஸே, சுக்லபக்ஷே, துவாதஸ்யாம் சுபதிதௌ,ப்ருகு வாஸரயுக்தாயாம், உத்திராஷாடாநக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் துவாதஸ்யாம் சுப திதௌ, மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| ரூ 
என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, 
ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி | சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச || என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.


பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு, 
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு|| என்று, புஷ்பார்ச்சனை செய்யவும். 


கங்காயை நம:| யமுனாயை நம:| கோதாவர்யை நம:| ஸரஸ்வத்யை நம:| நர்மதாயை நம:| ஸிந்தவே நம:| காவேர்யை நம:| தாம்ரவர்ண்யை நம: என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும். 


குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:| குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:|| 
என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும். 
அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, ப்ரம்மரூவிஷ்ணு ரூமஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்) ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்) ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்) ஆம்ரூபீஜம், ஹ்ரீம்ரூசக்தி:, க்ரோம்ரூகீலகம்|| 
பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.


ஆவாஹிதோ பவ| ஸ்தாபிதோ பவ| ஸந்நிஹிதோ பவ| ஸந்நிருத்தோ பவ| அவகுண்டிதோ பவ| ஸுப்ரீதோ பவ| ஸுப்ரஸன்னோ பவ| ஸுமுகோ பவ| வரதோ பவ| ப்ரஸீத ப்ரஸீத| தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்| தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு|| 
– இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும். 
கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும். 


பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்| க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்| க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்| பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே| வரலக்ஷ்ம்யை நம:| என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும். 


பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸ_த்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹூலான் வரான்|| என்று, 9 முடிகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும். 
ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே| ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ|| வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி| ரூ என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும். 


ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸ_த்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணிஃபனைஓலை அணிவிக்க)ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்) ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்) 


பிறகு அங்க பூஜை செய்யவும். முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும். 
பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.


ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: ஓம் ச்ரத்தாயை நம: ஓம் விபூத்யை நம: ஓம் ஸுரப்யை நம: ஓம் பரமாத்மிகாயை நம: ஓம் வாசே நம: ஓம் பத்மாலயாயை நம: ஓம் பத்மாயை நம: ஓம் சுசயே நம: ஓம் ஸ்வாஹாயை நம: ஓம் ஸ்வதாயை நம: ஓம் ஸுதாயை நம: ஓம் தன்யாயை நம: ஓம் ஹிரண்மய்யை நம: ஓம் லக்ஷ்ம்யை நம: ஓம் நித்யபுஷ்டாயை நம: ஓம் விபாவர்யை நம: ஓம் அதித்யை நம: ஓம் தித்யை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் வஸுதாயை நம: ஓம் வஸுதாரிண்யை நம: ஓம் கமலாயை நம: ஓம் காந்தாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம: ஓம் க்ரோதஸம்பவாயை நம: ஓம் அனுக்ரஹப்ரதாயை நம: ஓம் புத்தயே நம: ஓம் அநகாயை நம: ஓம் ஹரிவல்லபாயை நம: ஓம் அசோகாயை நம: ஓம் அம்ருதாயை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் லோகசோக விநாசின்யை நம: ஓம் தர்மநிலயாயை நம: ஓம் கருணாயை நம: ஓம் லோகமாத்ரே நம: ஓம் பத்மப்ரியாயை நம: ஓம் பத்மஹஸ்தாயை நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மஸுந்தர்யை நம: ஓம் பத்மோத்பவாயை நம: ஓம் பத்மமுக்யை நம: ஓம் பத்மநாபப்ரியாயை நம: ஓம் ரமாயை நம: ஓம் பத்மமாலாதராயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் பத்மின்யை நம: ஓம் பத்மகந்தின்யை நம: ஓம் புண்யகந்தாயை நம: ஓம் ஸுப்ரஸன்னாயை நம: ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம: ஓம் ப்ரபாயை நம: ஓம் சந்த்ரவதனாயை நம: ஓம் சந்த்ராயை நம: ஓம் சந்த்ரஸஹோதர்யை நம: ஓம் சதுர்ப்புஜாயை நம: ஓம் சந்த்ரரூபாயை நம: ஓம் இந்திராயை நம: ஓம் இந்துசீதளாயை நம: ஓம் ஆஹ்லாதரூஜனன்யை நம: ஓம் புஷ்ட்யை நம: ஓம் சிவாயை நம: ஓம் சிவகர்யை நம: ஓம் ஸத்யை நம: ஓம் விமலாயை நம: ஓம் விச்வஜனன்யை நம: ஓம் துஷ்ட்யை நம: ஓம் தாரித்ர்யரூநாசின்யை நம: ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம: ஓம் சாந்தாயை நம: ஓம் சுக்லமால்யாம்பராயை நம: ஓம் ச்ரியை நம: ஓம் பாஸ்கர்யை நம: ஓம் பில்வநிலயாயை நம: ஓம் வராரோஹாயை நம: ஓம் யசஸ்வின்யை நம: ஓம் வஸுந்தராயை நம: ஓம் உதாராங்காயை நம: ஓம் ஹரிண்யை நம: ஓம் ஹேமமாலின்யை நம: ஓம் தனதான்யகர்யை நம: ஓம் ஸித்தயே நம: ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம: ஓம் சுபப்ரதாயை நம: ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம: ஓம் வரலக்ஷ்ம்யை நம: ஓம் வஸுப்ரதாயை நம: ஓம் சுபாயை நம: ஓம் ஹிரண்யப்ராகாராயை நம: ஓம் ஸமுத்ரதனயாயை நம: ஓம் ஜயாயை நம: ஓம் மங்களாதேவ்யை நம: ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம: ஓம் விஷ்ணுபத்ன்யை நம: ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம: ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம: ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம: ஓம் தேவ்யை நம: ஓம் ஸர்வோபத்ரவரூவாரிண்யை நம: ஓம் நவதுர்காயை நம: ஜஓம் மஹாகால்யை நம: ஓம் ப்ரஹ்மவிஷ்ணுரூ சிவாத்மிகாயை நம: ஓம் த்ரிகாலஜ்ஞான  ஸம்பன்னாயை நம: ஓம் புவனேஸ்வர்யை நம: 

 ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்.

Thanks Guru Sasthrigal

பூஜை முடிந்தவுடன் ஆரத்தி எடுக்க வேண்டும்.

சாயங்காலம்  சுண்டல் /பழம் வைத்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து கற்பூரம் ஏற்றி நமஸ்காரம் செய்து அம்மனை அரிசி பானையில் வைக்கவேண்டும் .அறையில் விளக்கு ஏற்றி கதவை சாத்திவிடவும் (சிறிது நேரம் ). எட்டாவது நாள் மறு வெள்ளிக்கிழமை சொம்பில் இருக்கும் அரிசியை சமைக்கும் அரிசியோடு சாதம் வடிக்கவேண்டும் .சொம்பை பலகையில் வைத்து நைவேத்தியம் செய்யவும் .

மறுநாள் காலை ராகுகாலம் இல்லாத நேரத்தில் நெய்வதியம் (சாதம்/பால்/பழம்)  படைத்தது ஆரத்தி எடுக்கவேண்டும் .

உங்களுக்கு தேவையான விளக்கங்களுக்கு கீழ் உள்ள link ஐ பயன்படுத்திக்கொள்ளவும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *