Sri Veeratteswarar temple- Thirukovilur ( keezhaiyur)

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் – திருக்கோயிலூர்

Sri Veeratteswarar Temple, Tirukovilur
Iraivan Entrance

இறைவன் : வீரட்டேஸ்வரர்

இறைவி : பெரியநாயகி

தலவிருச்சகம் : சரக்கொன்றை

தீர்த்தம் : தென்பெண்ணை ஆறு

  • தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 222 வது தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 11 வது தலமாகும் .
  • அட்ட வீராட்த் தலங்களில் மிக பழமையான 2 வீரட்டானம் தலமாகும் .
  • அந்தகார சூரனை சிவபெருமான் வதைத்த தலம்.
  • விநாயகர் அகவல் பாடிய ஔவையார் அவர்களை திருக்கைலாயத்துக்கு கொண்டு சேர்த்த பெரியானை கணபதி சிறப்புடையது .
  • சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் பாடிய திருத்தலம் .
  • திருமூல நாயனார் அவர்களின் திருமந்திரம் பாடல் பெற்ற தலம்
  • வாஸ்து பூஜை மூலவர் தோன்றிய இடம்
  • 64 பைரவர்கள் தோன்றிய இடம்
  • சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற இடம் .
  • பில்லி, சூனியம் ,வைப்பு ஆகியவற்றிக்கு விமோசனம் கிட்டும் இடம் .
  • பாரி வேந்தர்களின் மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகியவர்களுக்கு இத்தலத்தில் கபிலர் மற்றும் ஔவையார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது .
  • ராஜராஜ சோழன் பிறந்த ஊர் . இவருடைய தமக்கை குந்தவை இக்கோயிலுக்கு பொன், பொருள் தந்துள்ளார் .
  • கபிலர் உயிர் நீத்த இடம் . இவருடைய குன்று கோயிலின் அருகிலேயே உள்ளது .
  • இறைவன் சுயம்புவாக காட்சி தருகிறார் . அம்பாள் திரிபுர சுந்தரி தோன்றிய இடம் .
  • ஷண்முக வேலவரை அருணகிரிநாதர் பாடியுள்ளார் .

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தலத்தை என்னுடைய india temple tour தலத்தில் பகிர்வதை பெருமையாக கருதிகிறேன்.

அமைவிடம் மற்றும் கோயில் திறந்திருக்கும் நேரம்

திருக்கோயிலூர் பேருந்து நிலையத்திற்கு முன்னதாக ஆற்று பாலத்தின் இறக்கத்தில் கீழையூர் என்ற இடத்தில உள்ளது .
காலை 6 .30 – 12 .00 மாலை 5 .00 – 8 .30

Location Map :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *