Sri Sundareswarar Swamy Temple (Mercury)- kovur,chennai

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம் ) -கோவூர்(சென்னை )

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வனே
– திருமூலர்

Sri Sundareswarar Temple, Kovur
Raja Gopuram

இறைவன் : ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் ,திருமேனி ஈஸ்வரர்

அம்பாள் : சௌந்தராம்பிகை , திருவுடைநாயகி

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம் , ஐராவது தீர்த்தம்

தல விருச்சம் : வில்வம்

ஊர் : கோவூர் , சென்னை

மாநிலம் : தமிழ்நாடு

  • இக்கோயில் சென்னையில் உள்ள நவகிரஹ தலங்களில் புதன்
    (mercury ) தலமாகும் .
  • இந்திரனின் வாகனமான ஐராவததினால் சீரமைக்கப்பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத தீர்த்தம் என்று அழைக்க பெற்றது .
  • கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் இறைவன் பெயருக்கு ஏற்றபடி மிக அழகுடன் காட்சி தருகிறார்
  • தியாக பிரம்மம் தனது பஞ்சரத்ன கீர்தனையில் இத்தலத்தின் இறைவனை பற்றி பாடியுள்ளார் .
Sri Sundareswarar Temple, Kovur
Temple Full View 

தல புராணம் :
காமாக்ஷி அம்மன் மாங்காட்டில் கடும் தவம் புரிந்தார் அபோது அவரின் தவாக்கினி சுற்றிலும் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களை கருக செய்தது ,வயல்கள் பாளம் பாளமாக வெடித்தது.இதை கண்ட ரிஷிகள் மஹா விஸ்ணுவிடம் முறையிட்டனர் . அவர் மஹா லக்ஷ்மியை பூலோகம் அனுப்பினார் .

அம்பாளுக்கு இறைவன் காட்சி கொடுத்தாலே தவம் பூர்த்தியாகும் என்பதால் லட்சுமி பசு வடிவமாகி லிங்கத்தை தேடி அலைந்தார் . ஒரு சுயம்பு லிங்கத்தை கண்டுகொண்ட திருமகள் அதன் மேல் பாலை சொரிந்தார் .திருமகள் இல்லாததால் விஷ்ணு உறக்கத்தில் ஆழ்ந்தார் . இதனால் பண்டிதர்களுக்கு பணம் இல்லை , எல்லோரும் புத மந்திரம் ஜபிக்க ,புதன் அவர்களுக்காக லக்ஷ்மியை தேடி பூலோகம் வந்தார் .

திருமகளின் கருணையை கண்டு ஈசன் பசுவிடம் என்ன வரம் வேண்டும் என வினவினார் . அவர்களோ மலைமகளுக்கு அருளவேண்டும் என்று கேட்டார் .அதர்க்கு இறைவன் சக்தியை காஞ்சிக்கு சென்று சிவபூஜை செய்யச்சொன்னார் . இறைவனின் சிரசிலிருந்து கங்கையை பொழிந்து இந்த இடங்களை குளிர செய்தார் .லட்சுமி சுய வடிவுக்கு திரும்பி ஈசனுடன் புதனுக்கு காட்சி தந்தார் .

கோ என்றால் பசு என்ற மறு பெயர் உண்டு , சிவ ஆராதனை நடத்திய இடம் என்பதால் கோவூர் என்ற பெயர் பெற்றது . பசுவுக்கு தன் சுயம்பு திருமேனியை காட்டியதால் திருமேனிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . வடமொழியில் சௌந்தராம்பிகை என்று அழைக்கப்படுகிறார் .

புதன் தகவல் :
அழகானவர் , சந்திரன் ,தாரைக்கு பிறந்தவர் , பிடித்த நிறம்
பச்சை ,ரத்தினம் மரகதம் , ஜாதகத்தில் உச்சத்திலிருந்து சுப கிரஹணங்களால் பார்க்கப்பட்டால் கல்வியில் சிறந்து விளங்குவர் , ஜோதிட நிபுணர் ,பேச்சாற்றல் மிக்கவர்கள் ,கணிதம் ,மருத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் இவரின் பார்வையினால் மட்டும் நடக்கும்.மிதுனம் ,கன்னி இவரின் சொந்த வீடு . கன்னி உச்ச வீடு ,மீனம் நீச வீடு ,சூரியன் ,சுக்ரன் இருவரும் நண்பர்கள் ,சந்திரன் எதிரி ஆவர்.

அமைவிடம் :
போரூர் குன்றத்தூர் சாலையில் கோவூர் ஊரின் பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ளது .

Location

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *