Sri Lakshmi Narasimhar Temple- Anthili

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் – அந்திலி

Sri Lakshmi Narasimhar Temple, Anthili
Full View

இறைவன் : லட்சுமி நரசிம்மர்

தல விருச்சகம் : அரசமரம்

ஊர் : அந்திலி , திருக்கோயிலூர்

மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு

  • கருட வடிவில் அமைந்த பாறையின் மேல் அமைந்துள்ள கோயில் . தினமும் சூரிய ஒளி ஸ்வாமியின் மீது படும் .
  • தன் பக்தன் பிரகலாதனை காப்பாற்ற தூணிலிருந்து நரசிம்மர் அவதாரம் எடுத்து இரணியனை அழித்து காப்பாற்றினார். விஷ்ணு பகவான் எங்கு செல்லும் போதும் கருடனின் மீதே ஏறி செல்வார். ஆனால் பக்தனுக்காக தூணில் அவசரமாக தோன்றினார் நரசிம்மர் . இதனால் பரமபதத்தில் உள்ள கருடன் ஏன் தன் மேல் ஏறி செல்லவில்லை என்ற மன குழப்பத்தில் பூலோகம் வந்து இந்த தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்த பாறையின் மீது உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் இருந்தார் ,மிகவும் பலசாலியான கருடன் பலவீனமாக மாறினார் அவரின் வெப்பம் பூலோகம் மற்றும் வைகுண்டம் வரை பரவியது எல்லாரும் நாராயணரிடம் முறையிட்டனர் ,நாராயணர் கருடனுக்கு காட்சி தந்து உனக்கு என்ன வேண்டும் என்று வினவினார் ,கருடன் அவரிடம் குழந்தை ப்ரஹலாதனுக்காக தூணில் இருந்து நரசிம்மராக வந்து காப்பாற்றினீர்கள் அந்த அவதாரத்தை தான் காணவேண்டும் என்றும் வேண்டினார். அவரின் விருப்பப்படி நாராயணர் நரசிம்மராக காட்சி தந்தார் ,அவரின் மடியில் லட்சுமி தாயாரும் வந்து அமர்ந்து கட்சித்தார் . அதனாலே இருவரும் உள்ளவாறு இங்கு மூலவர் அமைக்கப்ட்டுள்ளது .
  • மத்வ சித்தாந்த மகான் இக்கோயிலின் சிறப்பை கேட்டு இக்கோயிலுக்கு விஜயம் செய்தார் , கருடவடிவில் உள்ள பாறையை கண்டு ஆச்சரியமுற்று இக்கோயிலின் பின் புறத்தில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார் . இவரே மறுபிறவியில் ராகவேந்தரராக அவதரித்தார் .
  • 400 வருடங்களுக்கு முன்பு அந்திலி ஆச்சாரியார் என்பவர் இக்கோயிலில் தங்கி பூஜைகள் செய்து வந்தார் அவரின் நினைவாக இக்கோயிலில் அவரின் உருவ சிலை பொறிக்கப்பட்டுள்ளது

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-lakshmi-narasimhar-temple-anthili.html

செல்லும் வழி :
அரகண்டநல்லூர் ரயில் நிலையத்தின் முன்புறம் உள்ள காவல் நிலையத்தின் அருகில் செல்லும் பாதையில் சுமார் 3 km சென்றால் இக்கோயிலை அடையலாம். பேருந்து வசதிகள் கிடையாது ,கார் அல்லது ஆட்டோ மூலம் செல்லலாம் . கோயில் நுழைவு கேட் மூலம் எப்போதும் காணலாம் . ஆனால் பூஜைகள் செய்யவேண்டும் எனில் முன்னரே பட்டாச்சார்யாரிடம் தெரிவித்து பின்பு செல்லவேண்டும் .

திரு . ஸ்ரீகாந்த் பட்டாச்சாரியார் – 8883767112

Location :

அருகில் உள்ள தலம் :
அதுலேஸ்வரர்அரகண்டநல்லூர் -பாடல் பெற்ற தலம்
வீரடீஸ்வரர் – கீழையூர் -திருக்கோயிலூர் -பாடல் பெற்ற தலம்
உலகளந்த பெருமாள் -திருக்கோயிலூர் -திவ்ய தேசம்
ஆதி திருவரங்கம் பெருமாள் – திருவரங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *