Sri Karivaratharaja perumal Temple- Nerkundram (Chennai)

ஸ்ரீ கரி வரத ராஜ பெருமாள் கோயில் – நெற்குன்றம் (சென்னை )

Sri Kari varatharaja Perumal -Nerkundram
Moolavar

சென்னையில் உள்ள பழமையான மற்றும் அதிகம் அறியப்படாத கோயில்களில் இக்கோயிலும் ஒன்று . நான் அதிகமாக இந்த இடம் வழியாக சென்று வந்திருக்கிறேன் ஆனால் அப்போது எனக்கு இக்கோயிலை பற்றி தெரியவில்லை , இப்போது கோயில்களை பற்றி எழுதத்தொடங்கியபோது வலைத்தளங்களின் வாயிலாக இக்கோயிலைப்பற்றி அறிந்து கொண்டு பார்க்க சென்றேன் முதலில் இக்கோயிலை கண்டுபிடிக்க சிறிது கஷ்டப்பட்டேன் கண்டவுடன் இந்த இடத்திலா உள்ளது என்று வியப்புற்றேன் .

Sri Kari Varatharajaperumal-Nerkundram
Main Entrance

மிக அழகான கோயில் 1000 வருடங்களுக்கு மேற்பட்ட கோயில் ஆனால் இவ்வித ஆடம்பரங்களோ உயர்ந்த கோபுரங்களோ இல்லாமல் மிக சிறிய மற்றும் தற்போது பலர் அன்பர்களின் உதவியோடு சற்று மேன்பட்டிருக்கும் கோயில்.

உள்ளே நுழைந்தவுடன் ஆஞ்சநேயர் சன்னதியை காணலாம் , மூலவர் சன்னதி முன் shed அமைக்கப்பட்டுள்ளது . மூலவர் கண்ணாடி அறையின் உள்ள ஸ்ரீ தேவி பூதேவியுடன் காட்சிதருகிறார் . நாம் கண்ணாடி அறையின் உள்ளே சென்றவுடன் பட்டாச்சாரியார் கதவை சாற்றிவிட்டு தீபம் ஏற்றும் போது மின்சார விளக்குகளை போடுகிறார் , அப்போது பெருமாளின் திறந்த கண்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது . இவ் பெருமாளின் சிறப்பே அவர் பக்த்தர்களுக்கு தன் இருக்கண்களையும் திறந்து அவர்களின் குறைகளை கேட்டு நிவிர்த்தி செய்வதுதான் .

கோயிலின் வரலாறு :
கரி என்றல் யானை , இவ் கோயிலின் புஷ்பகரணியிலிருந்து தினமும் தாமரை மலரை எடுத்து இந்த விஷ்ணு பக்த யானை பூஜை செய்துவந்தது . அவ்வாறு எடுத்து பூஜை செய்கையில் ஒரு நாள் குளத்தில் இருந்து பூவை பரித்தபோது பாரதராஜ் முனிவரின் சாபத்தை பெற்ற ஒரு முதலை இவ் யானை தீண்டினால் மட்டுமே சாப விமோச்சனம் பெறமுடியும் என்ற காரணத்தால் அவ் யானையின் பாதத்தை பற்றியது , யானையின் தும்பிக்கையில் புஷ்பமும் கால் முதலையின் வாயில் உள்ளதாலும் “ஆதிமூலமே ” என்று குரல் எழுப்பியது கூப்பிட குரலுக்கு வந்து நிற்கும் பெருமாள் இவர்களின் நிலையை கண்டு இவர்களுக்கும் விமோச்சம் கிட்ட தன் சக்கரத்ஆழ்வாரை பிரயோகனம் பண்ணினார் , சக்கரத்தாழ்வார் இருவரையும் கரையில் கிடத்தினார் , யானை கரைக்கு வந்ததும் பலம் கிட்டியதும் முதலையை உதைத்தது உடனே முதலைக்கு சாப விமாரோச்சனம் கிட்டியது ,பெருமாள் யானைக்கு விமோச்சம் தந்து , பெருமாள் இருவருக்கும் மோட்சத்தை கொடுத்தார் .

அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்

கோயம்பேடு மார்க்கெட் வழியாக நாராயணா பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள சாலையில் சென்றால் பல்லவன் நகர் வரும் வெங்காய மண்டி பேருந்து நிலையத்திற்கு திரும்பும் சாலையின் முன் வலது புறத்தில் சிறிய தெருவின் கடைசியாக உள்ளது . மற்றொரு வழி வெங்காய மண்டி பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள அம்மா உணவகத்தின் அருகில் உள்ள சாலையில் சென்று கடைசியாக இடது புறம் திரும்பி முதல் சிறிய தெரு வரும் அதில் கடைசியாக இக்கோயில் உள்ளது .

பட்டாச்சாரியார் தொலைபேசி : 9962811792

கோயில் காலை 8 .30 முதல் 12 .30 வரை
மாலை 5 .30 முதல் 8 .30 வரை

கண்டிப்பாக நேரும் கிடைக்கும் போது சென்று பெருமாளை தரிசித்து உங்களால் முடிந்த எண்ணெய், நெய் மற்றும் பண உதவிகளை செய்து இறைவனின் அருளை பெறுக .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *